ராணிப்பேட்டை,அக்.2 – ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா தலை மையில் திங்களன்று (அக். 28) நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 9 ஊராட்சிகளில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் குப்பைகள் சேகரம் செய்து கொண்டு செல்ல 10 மின்கல வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாதாந்திர உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு தீபா வளியை முன்னிட்டு இலவச வேட்டி மற்றும் சேலைகள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார். இதைத் தொடர்ந்து செல்வமந்தை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், உளியநல்லூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டிடம், வேளிய நல்லூர் ஊராட்சி, பிள்ளைப் பாக்கம் கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என மொத்தம் ரூ. 89.86 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற 4 வளர்ச்சி திட்டப் பணிகளை பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சட்ட மன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம் முன்னிலை வகித்தார். திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா. ஜெயசுதா, வரு வாய் கோட்டாட்சியர் பாத்திமா, ஒன்றியக் குழுத் தலைவர் வடிவேலு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆறு முகம், ஜீவா, அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.