சென்னை, ஜுன் 11- அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் வரும் 23ஆம் தேதி மாலை 4 மணியளவில் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது என்று தலைமை அஞ்சலக அதிகாரி எம்.ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002 வாயிலாக தபால் சேவைகள் அதாவது மணியார்டர் / பதிவுத்தபால் / சேமிப்பு வங்கி முதலிய சேவைகளை பெற்று வரும் பயனாளிகள், சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நேரிலோ, தபால் வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் (doannaroadhpo.tn@indiapost.gov.in) வாயிலாகவோ வரும் 20ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002 என்ற முகவரிக்கு, “குறைதீர்வு முகாம்” என்ற தலைப்பில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், வரும் 23ஆம் தேதி மாலை 4 மணியளவில் பயனாளிகள் குறை தீர்வு முகாமில் நேரில் வந்தும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.