விழுப்புரம்,நவ.7- விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் பணி பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை புகார் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரஜபுத்திரபாளையத்தில் கடந்த நவம்பர் 5- ந்தேதி அன்று அங்குள்ள ஏரியில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை காண்காணித்து அளவீடு செய்ய வந்திருந்த அதிகாரி அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை ஒருமையில் பேசி, நாக்கை கடித்து கொண்டு கையை ஓங்கி மிரட்டி உள்ளார். சம்பந்தப்பட்ட அலுவலரின் நடவடிக்கை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டமங்கலம் ஒன்றிய கிளை செயலாளர் ராஜதுரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கண்டமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.