வரிவிதிப்பு வட்டங்களில் கூடுதலாக இரண்டு உதவியாளர் தட்டச்சர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், தினந்தோறும் தொடர்ச்சியாக அறிக்கைகள் கோரும் நிலையினை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜன.7) வணிக வரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கிரீம்ஸ் சாலை வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சா. டானியல் ஜெயசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.