districts

சென்னை முக்கிய செய்திகள்

மாட்டுப் பண்ணை கழிவு நீரால் கல்லூரி மாணவிகள் அவதி!
சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை, ஜன.17 சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை - அறிவியல் கல்லூரியின் வளாக வெளிப்புறத்தில், சிலரால் மாட்டுப் பண்ணை ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.  இந்தப் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது கல்லூரியில் உள்ள கிணற்றில் கலப்பதால், கல்லூரி மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளா கின்றனர். மாட்டுப் பண்ணையின் கழிவுநீர் சட்டவிரோதமாக அடையாறு ஆற்றில் நேரடியாக விடப்படுகிறது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், பெருநகர சென்னை மாநக ராட்சியின் அடையாறு மண்டல நல அலுவலர், மாட்டுப் பண்ணை உரிமை யாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கழிவு நீரானது, கசிந்து, கல்லூரி வளா கத்தில் உள்ள கிணற்று நீரை மாசுபடுத்தி விடுவதால், கொசு உற்பத்தி ஆகிறது. இதனால் மாணவிகளுக்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், பலமுறை மாட்டுப் பண்ணை உரிமையாளர்களிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மாநகராட்சியின் அடையாறு மண்டல அலுவலகம், மாட்டுப் பண்ணை உரிமை யாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஊராட்சியின் துணைத் தலைவருக்கு அரிவாள் வெட்டு

கிருஷ்ணகிரி,ஜன.17- ஓசூர் அருகே மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மண்டபள்ளியை சேர்ந்த ஹரிஷ் ரெட்டி ஊராட்சியின் துணை தலைவராக உள்ளார்.  இந்நிலையில் சம்பவத்தன்று முன் விரோதம் காரணமாக மஞ்சுநாத் சீனிவாசன் ஹரிஷ் ரெட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த ஹரிஷ் ரெட்டி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டது சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து மஞ்சுநாத் சீனிவாசன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

‘அன்பிலதனை அறம்’ கலைப் பயணம் இன்று புதுவை வருகை

புதுச்சேரி,ஜன.17- மக்கள் ஒற்றுமையை மேம்படுத்த, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, வெறுப்பு அரசியலை வேரறுக்க ‘அன்பிலதனை அறம்’ அனைத்திந்திய கலைப் பயணம் வருகிற ஜனவரி 18 , 19 தேதிகளில் புதுச்சேரிக்கு வருகிறது.  இந்த கலை பயணத்தில் சென்னை கலைக்குழு, பக்கீர்கள் தப்ஸ் இசைக்குழு, கேங்ஸ்டா வின் ராப் இசைக்குழு, தெண் கண் பறை இசைக்குழு ,யாழ் அரங்கம், புதுச்சேரி, சப்தர் ஹஷ்மி கலைக்குழு, விடுதலைக் குரல்கள், கலை ஆலயம் பைன் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் ஆகிய  குழுக்கள் கலைப் பயணத்தின் பங்கேற்க இருக்கின்றன. தொடக்க விழா அனைத்திந்திய கலைப்பயணம் 18 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மகாகவி பாரதியார் இல்லத்தில் அரிமளம் சு. பத்மநாபனின் அருட்பா இன்னிசை, கிருத்திகாவின் நாட்டியாஞ்சலி உடன் தொடங்குகின்றன. பாவேந்தர் பாரதிதாசன் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி, கலைப் பேரணி தொடங்குகிறது.  மக்கள் கலை விழா சாரம் ஜீவா சிலை அருகில் மாபெரும் மக்கள் கலை விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மு.வீரபாண்டியன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் சுகிர்தராணி, நாடகவியலாளர் பிரளயன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஜனவரி 19 அன்று காலை 9 மணிக்கு வில்லியனூர் அம்பேத்கர் சிலையில் இருந்து, கலைப் பேரணி தொடங்குகிறது. சுதா சுந்தரராமன் உரையாற்றுகிறார். வீராம்பட்டினத்தில் இரவு 7 மணிக்கு கலைப்பயணம் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. புதுச்சேரியில் 10 மையங்களில் நடைபெறக்கூடிய கலைப்பயணம் நிகழ்வுகளை, எல்லை சிவக்குமார், எஸ் ராமச்சந்திரன், முனைவர் மேரி ஸ்டெல்லா, த nஜயமூர்த்தி  ஆகியோர் ஒருங்கிணைக்கிறார்கள்.

வாக்காளர் வினாடி வினா போட்டி

விழுப்புரம்,ஜன.17- வாக்காளர்களுக்கு வினாடி - வினா போட்டி தேர்தல் ஆணையம் மூலம் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.  இது குறித்து ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற் பதை அதிகரிக்கும் நோக்கில் 14வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு ஸ்வீப் திட்டத்தின்படி, மாநில அள விலான பொது மக்களுக் கான வினாடி வினா போட்டி ஜன. 21 ஞாயிற்றுக் கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. விருப்பமுள்ள வர்கள் வரும் ஜன.18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்களில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தோழர் ஆர்.சாவித்திரி  முதலாம் ஆண்டு நினைவு தினம்

வேலூர், ஜன. 17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட மூத்த தோழரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வேலூர் மாவட்ட ஸ்தாபக தலைவருமான ஆர்.சாவித்திரியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி தலைமையில் வேலூர் பால் பண்ணை எதிரிலிருந்து துவங்கிய ஊர்வலம் ஆர்.சாவித்திரி நினைவு இல்லம் வரை சென்றது. அங்கு நடந்த நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், எம்.பி.ராமச்சந்திரன், கே.சாமிநாதன் எஸ்.ஏகலைவன் வேலூர் வடக்கு செயலாளர் கே.பாண்டுரங்கன், மாவட்டக்குழு உறுப்பினர்கள்  வி.நாகேந்திரன், எஸ்.சுரேந்திரன் ஏ.குப்பு கே.ஆண்டாள், பெ.திலீபன் எஸ்.சிலம்பரசன், சி.சரவணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.