கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டம்,சாத்தனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் காளான் வளர்ப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பார்வையிட்டு காளான் வளர்ப்பு முறைகள், உற்பத்தி,விற்பனை விபரம்,வருமானம், மானியத் தொகை, காளான் பயன்பாடு, சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.