districts

img

அண்ணாமலை நகரில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்ட கூட்டம்

சிதம்பரம், அக. 24- சிதம்பரம் அண்ணாமலைநகர், 20 அம்சம் நகரில் தூய்மை பணி யாளர் மேம்பாட்டு திட்டத்திற்கு ஒருங்கி ணைப்பாளர் அறிமுகக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அண்ணா மலை நகர் பேரூராட்சி செயல் அலுவலர் பால முருகன் தலைமை தாங்கினார். அண்ணா மலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி, 1-வது வார்டு மன்ற உறுப்பினர் சபரி ராஜன், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு இந்த மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றனர். இந்த திட்டத்தின் கீழ் அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீர் கட்டமைப்புகளை தூர் வருவோர், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ப வர், வணிக நிறுவனங்கள் பொது மற்றும் சமூக கழிப்பறைகளை சுத்தம் செய்து பராமரிப்போர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.