districts

img

திருவள்ளூரில் 4 மையங்களிருந்து சிஐடியு நடைபயணம்

திருவள்ளூர், மே 13 -

    தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவில் இணைக்கப்பட்ட சங்கங்களின் கூட்டம் திருவள்ளூரில் சனிக்கிழமையன்று (மே 13) மாவட்டத் தலைவர் கே.விஜயன் தலைமையில் நடைபெற்றது.

   இதில் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநில உதவி பொதுச் செயலாளர் வி.குமார், மாநில துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் என்.நித்தியானந்தம் ஆகியோர் பேசினர்.

   விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 19 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் ஆகிய நான்கு மையங்களிருந்து நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது