புதுச்சேரி,ஏப்.28- சிஐடியு செக்யூர் வேல்யூ தொழிலாளர் நலச் சங்கம் உதயமானது. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் செக்யூர் வேல்யூ தொழிலாளர் நல சங்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா புதுச்சேரி இந்திரா காந்தி சிலை எதிரில் நடைபெற்றது. சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எம்.பி.மதிவாணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் புதிய பெயர் பலகையை சிஐடியு புதுச்சேரி மாநில செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார். மாநிலத் தலைவர் பிரபுராஜ், நிர்வாகிகள் மது,வடிவேல், ராஜ்குமார்,ரெக்ஸ்,முரளி,செந்தில், செல்வம்,சேவியர்,ரகுபதி அருள்குமார், செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். சங்கத் செயலாளர் ஐயப்பன்,செயல் தலைவர் சொர்ண குமார்,பொருளாளர் ரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.