districts

img

ஆன்லைன் அபராதத்தை தடுத்து நிறுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

கடலூர், செப். 27- ஆன்லைன் அபராதத்தை தடுத்து நிறுத்தக்கோரி சிஐடியு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் தடுத்து நிறுத்த இடைத்தரகர் முறையை ஒழித்திட வேண்டும், நலவாரிய பதிவை ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அனைவருக்கும் நல வாரிய பதிவு செய்ய அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.திருமுருகன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் பி. கருப்பையன், மாவட்ட இணைச் செயலாளர் வி. சுப்புராயன், ஆட்டோ சங்கம் மாவட்டச் செயலாளர் ஏ.பாபு, உரிமை குரல் ஓட்டுநர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி. ஷேக் தாவூத், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். சண்முகம், மாவட்டப் பொருளாளர் முகிலன், கே. பிரபாகரன் உள்ளிட்ட கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.