கிருஷ்ணகிரி,ஜன.6- ஓசூர் மாநகராட்சியில் சாலை யோர சிறுகடை, நடைபாதை, தள்ளு வண்டி,தலை சுமை,தரை கடை கள் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர். அதில் கிடைக்கும் மிகக் குறைந்த வருமானத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். ஓசூர் மாநகராட்சியாக மாற்றப்பட்ட பிறகு, சிறு வியாபாரி கள் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக சுங்க வரி என்ற பெயரில் தண்ட வசூல், மாமூல் வசூலித்து வருகிறார்கள். இதுகுறித்து கேள்வி கேட்டால் மிரட்டப்படுவதும் வியாபாரம் செய்ய விடாமல் தடுக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு நீதி கேட்டு கிருஷ்ணகிரி மாவட்ட சாலையோர தரைக் கடை நடைபாதை தள்ளுவண்டி வியா பாரிகள் சங்கம் (சிஐடியு) தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முனீஸ்வரர் நகரிலிருந்து தர்கா ஏரி வரை உள்ள 100 அடி சாலையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை திடீரென மாநகராட்சியால் அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது சிஐடியு போராட்டம் நடத்தியது. பிறகு ஆணையர் சினேகா, மேலாளர் சீனிவாசன், பொறியாளர் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, அப்புறப்படுத்த பட்ட வர்களுக்கு அடையாள அட்டை யும், கடை நடத்துவதற்கான இடம் விரைவில் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், இது வரை அடையாள அட்டை வழங்க வில்லை. மாற்று இடமும் வழங்க வில்லை. பாதிக்கப்பட்ட உண்மையான வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்காமலும் முறையான அறிவிப்புகள் எதுவும் செய்யாமல் வாக்காளர் பட்டியலையும் வெளி யிடாமல் வெண்டிங் கமிட்டி (விற்பனை குழு) தேர்தல் நடத்தி முடித்து, தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர். முறைகேடாக நடத்தப்பட்ட வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக ரத்து செய்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அனை வருக்கும் அடையாள அட்டை வழங்கி வெளிப்படை தன்மையுடன் மீண்டும் தேர்தலை நடத்த வலியுறுத்தியும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில், மாநகராட்சி அலுவலகம் முன்பு கிருஷ்ணகிரி மாவட்ட சாலையோர சிறுகடை நடை பாதை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பி.ஜி.மூர்த்தி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தலைவர் வாசு தேவன், பொருளாளர் ஸ்ரீதரன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.