கிருஷ்ணகிரி,மே.1- ஓசூர் அசோக் லேலண்டு யூனிட் 1 இல் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற சிஐடியு அணி முன்னாள் தலைவர் ஆறுமுகம் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. அணி யின் தலைவர் பெத்து முருகேசன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ஸ்ரீதர்,மார்க்சிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன், முன்னிலை வகித்தனர். அசோக் லேலண்ட் சங்க முன்னாள் செயலாளர் குமரேசன் வரவேற்றார்.சிஐடியு மாநிலத் தலைவர் சந்திரன் வாழ்த்தி பேசினார். பணி நிறைவு பெற்ற ஆறுமுகம் சிஐடியுவுக்கு 5000,மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5000,சிஐடியு மாநில குழு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு 5000, தீக்கதிர் வளர்ச்சி நிதியாக 2000 நிதி அளித்தார்.பணி நிறைவு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுமுகம் அவர் இணையர் செல்வக்கனி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.