கடலூர், ஆக.18- சிஐடியு கடலூர் மாவட்ட 13ஆவது மாநாடு பண்ருட்டியில் எழுச்சிப் பேரணியுடன் துவங்கியது. இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட மாநாடு பண்ருட்டியில் ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதை யொட்டி வியாழனன்று (ஆக. 18) பண்ருட்டி விழங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகி லிருந்து ஊர்வலம் தொடங்கி யது. மாவட்டத் தலைவர் டி.பழனிவேல் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு செயலாளர் ஏ.தேவ ராஜூலு வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் கே.திருச்செல்வம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.மாவட்டச் செயலாளர் பி. கருப்பையன் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் ஜி.குப்புசாமி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். வெள்ளியன்று மூத்த தொற்சங்கத் தலைவர் டி.கே.ரங்க ராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.