districts

சிட்லபாக்கம் வருவாய் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள்

சென்னை, ஏப். 12-  சிட்லபாக்கம், மாடம்பாக்கம், மேடவாக்கத்தில் வருவாய் அலுவலகங்க ளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று  வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர், எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் தொகுதி கடப்பேரி கிராம நிர்வாக அலுவலகத்துக்கும், சிட்லபாக்கம், மாடம்பாக்கம் ஆகிய இடங்களில் புதிய வருவாய் ஆய்வாளர் கட்டிடங்களும் கட்டப்படுமா? என்று கேள்வி  எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.  ராமச்சந்திரன், தாம்பரம் தொகுதி கடப்பேரி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு, இடம் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கும் என்றும், சிட்லபாக்கம், மாடம்பாக்கம்,  மேடவாக்கம் ஆகிய இடங்களில் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்க ளுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்றார்.