வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 568 பயனாளிகளுக்கு மூன்று கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வே.ரா.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த் ஆகியோர் வழங்கினார். குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் லோ.ரவிச்சந்திரன் (கே.வி. குப்பம்), என்.இ.சத்தியானந்தம் (குடியாத்தம்), ஒன்றிய குழு உறுப்பினர்கள் சீதாராமன், சோபன் பாபு, மீனாம்மாள். தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.