சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் (சிபிஎம்) சந்தித்து கைத்தறி ஆடை அளித்து வரவேற்றார். அதேபோல் சி தண்டேஸ்வரர் நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பனும் முதல்வரை சந்தித்தார். வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அப்போது உடன் இருந்தார்.