சென்னை, டிச.29- சென்னை உதயம் தியேட்டர் நிரந்தர மாக மூடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். உதயம் திரையரங்க கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு வர இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முதற்கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்த உதயம் திரையரங்கம் சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்றாக கூறப்படு கிறது. இந்த தியேட்டர் கட்டப்பட்டபோது உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று திரையரங்களை கொண்டு இயங்கி வந்தது. அதன் பின்னர் உதயம் திரை யரங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு மினி உதயம் என்ற பெயரில் கூடுதலாக ஒரு திரையரங்கம் இதனுடன் சேர்க்கப்பட்டது. மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் பெரிய அளவில் கால் பதிக்காத காலக்கட்டங்களில் சென்னை ரசிகர்களின் கொண்டாடும் திரை யரங்கங்களில் ஒன்றாக உதயம் திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல சென்னையில் நல்ல வசூல் செய்து நடக்கும் திரையரங்குகளில் ஒன்றாகவும் உதயம் திரையரங்கம் விளங்கி வந்தது. சென்னையில் மல்டி பிளக்ஸ் திரை யரங்கள் வந்த பிறகு உதயம் போன்ற திரை யரங்கங்களின் மவுசு என்பது மிகவும் குறையத் தொடங்கியது. 40 ஆண்டு காலமாக சென்னை சினிமா கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக பல எண்ணற்ற நினைவுகளை சுமந்து நிற்கும் உதயம் திரையரங்கம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.