சென்னை, நவ 11- சென்னையிலிருந்து இலங்கையில் திரிகோணமலை,கொழும்பு, மாலத்தீவு மார்க்கத்தில் சுற்றுலா சொகுசு பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்க ‘லிட்டோரல் குரூஸ்’ கப்பல் நிறுவனம் சென்னை துறைமுகத்தோடு கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இதே நிறுவனம் சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வழியாக சிங்கப்பூர் செல்லும் சொகுசு கப்பலை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டுள்ளது என்று துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார். சென்னை துறைமுக ஆணையத்தின் அலுவலகத்தில் 2022 23 நிதியாண்டு மற்றும் 2023 24 நிதியாண்டின்போது 60 ஆயிரத்துக் கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள சென்னை துறைமுகம் இந்தியா வின் கிழக்குக் கடற்கரையில் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா கப்பல் தளங்களில் ஒன்றாகும். சென்னை துறைமுகம் அதன் உள்நாட்டில் ஐக்கிய நாடுகளின் பாரம்பரிய கோவில், கலை தளங்கள் இருப்பதால் சர்வதேச கப்பல்களில் வரும் சுற்றுலா பயணி களுகுபுகு விருப்பமான துறைமுகங்களில் ஒன்றாகும். கவர்ச்சிகரமான கட்டணம் மற்றும் சுற்றுலா நட்பு சூழல் சென்னை துறைமுகத்தின் மற்றொரு சிறப்பாகும். ‘லிட்டோரல் குரூஸ்’ நிறுவனம், சென்னை திரிகோணமலை கொழும்பு மாலத்தீவுகள் மார்க்கம் மற்றும் சென்னை விசாகப்பட்டினம் சிங்கப்பூர் மார்ககத்தில் ஆகிய 2 பெரிய கப்பல்களையும் (800/1200 பயணிகள் திறன்) மற்றும் 2 சொகுசு படகு களையும் 20 30 பயணிகள்) இயக்க திட்ட மிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் இந்த பயணம் துவங்கும். சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் ‘லிட்டோரல் குரூஸ்’ அதன் சுற்றுலா பாதைகளில் ஒன்றாக சென்னை துறைமுகத்தை தேர்ந்தெடுத்த தற்காக பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், டிராபிக் மேனேஜர் கிரு பானந்த ஸ்வாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.