சென்னை, ஜன.22- சென்னை நகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் சென்னை பெருநகர மூன்றாவது மாஸ்டர் பிளானுக்கான திட்டம் தயாரிப்பதற்காக கருத்து கேட்பு கூட்டம் சி எம் டி ஏ சார்பில் குன்றத்தூரில் ஞாயிறன்று (ஜன.22) நடைபெற்றது. அக்கூட்டத்தில் வரதராஜபுரம் நலமன்ற கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் வெ. ராஜசேகரன் கலந்துகொண்டு பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார். அவர்மேலும் பேசியதாவது: சென்னை நகர வளர்ச்சிக்குழு மத்தின் மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிப்பில் பெரும்பாலும் அதி காரிகள் தான் ஈடுபடுவார்கள் என நினைக்கிறேன். அவர்கள் மட்டும் இன்றி நகர்மய நிபுணர்களும், நகர்ப்புற செயல் பாட்டாளர்களும், பொரு ளாதார சமூக அறிஞர்களும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் உள்ளடங்கிய நகர்புற ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். அந்த ஆணையம் ஆலோ சனையை பெற்று மீண்டும் பொது மக்களின் கருத்து கேட்பது சரியாக இருக்கும். தொழிற்சாலை, குடி யிருப்பு போன்ற பகுதிகளுக்கு வகை மாற்றம் செய்யும்பொழுது அதற்கு ஏற்ற நிலம் தானா என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்ற முறையில் வகை மாற்றம் செய்ய வேண்டும். அதேபோல் இந்த திட்டத்தில் அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்படலாம் அதற்கேற்ற மண்வளம் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்த பிறகே கட்ட வேண்டும்.
இல்லை என்று சொன்னால் போரூருக்கு அருகில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது போன்ற நிலைமை பிற்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாது. தொழிற்சாலைகள் அமையக்கூடிய இடத்திற்கு அருகாமையில் குடி யிருப்புகள் கட்டக் கூடாது. அப்படி அமைந்தால் பொதுமக்களின் உடல் நலம் பாதிக்கும், சுற்றுப்புற சூழல் கெடும். மேலும் ஏற்கனவே இரண்டாவது மாஸ்டர் பிளான் அடிப்படையில் அமைக்கப்பட்டது தான் 400 அடி புறவட்ட சாலை. இந்த புறவட்ட சாலையால் தான் 2015ல் வரதராஜபுரத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. எனவே மூன்றாவது மாஸ்டர் பிளானில் அப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புறவட்ட சாலையில் அடை யாறு ஆற்றின் மேல் இன்னொரு பாலம் கட்ட வேண்டும். அதேபோல் புறவட்ட சாலையின் சர்வீஸ் சாலை களின் இருபுறமும் குறைந்தது 5 அடி அகலத்திற்கு மழை நீர் வடி கால்வாய் அமைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் குடியிருப்பு பகுதிகளில் பெய்கின்ற மழை நீர் வடிவதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை அடிப்படையில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அதில் கூவம் அடையாறு, பக்கிங் காம் போன்ற ஆறுகளில் உள்ள தண்ணீர் எதற்கும் பயன்படாது என்று அந்த அறிக்கை கூறுகிறது. அடையாறு ஆற்றில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் மிகவும் தெளிவாக இருந்தது. தற்போது கழிவுநீர் கலந்த தண்ணீராகத்தான் அடையாறு ஆறு உள்ளது. எனவே அடையாறு ஆற்றின் குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய அனைத்து இடங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கழிவு நீரை சுத்திகரித்து ஆற்றில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரண்டாவது மாஸ்டர் பிளானில் தெரிவித்திருந்தபடி புறவட்ட சாலைகளின் நடுவே மெட்ரோ ரயில் விடுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாஸ்டர் பிளானில் மெட்ரோ ரயில் திட்டத்தையும் சேர்க்க வேண்டும்.