districts

img

ஆசிய அலைசறுக்குபோட்டிக்கு சென்னை மாணவி தேர்வு

மாமல்லபுரம்,ஆக.31- செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மீனவர் பகுதி ஒத்தவாடை தெருவை சேர்ந்த சுகந்தி என்பவரின் மகள் கமலி (வயது 14). இவர் மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகி றார். மீனவர் குடும்பத்தை சேர்ந்த இவர் தனது மாமா கடலில்  சர்பிங் செய்வதை பார்த்து வளர்ந்ததால், அதன்மீது ஆர்வம் ஏற்பட்டு 2வயது முதலே சர்பிங் (அலைசறுக்கு)  மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சி எடுக்க துவங்கினார். தொடர்ந்து வயது வாரியான பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட, மாநில,  தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார். இந்த நிலையில் மாலத்தீவில் நடந்த ஆசியன் சர்பிங் சாம்பியன்ஷிப்  போட்டியில் பங்கேற்று 4 சுற்றுவரை முன் னேறி, இந்தியா சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.  தொடர்ந்து ஜப்பானில் 2026ம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம்  தேதி முதல் அக்டோபர் 4- ஆம் தேதி வரை16நாட்கள் நடை பெற உள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று விளையாட அவர் தகுதி பெற்றுள்ளார்.