சென்னை பல்கலை. பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை, ஜன. 9 - கொரோனா பரவலைத் தொடர்ந்து பருவத் (செமஸ்டர்) தேர்வுகளை ஒத்திவைப்பதாக சென்னை பல்கலைக் கழகம் அறிவித்து ள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்குவரும் ஜன.20ந் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட் ்டுள்ளது. 21ந் தேதிமுதல் பருவத் தேர்வுகள் நடை பெற இருந்தன. இந்நிலை யில் இந்த அறிவிப்பை வெளி யிட்டுள்ள சென்னை பல் கலைக் கழகம், இந்த பருவத் தேர்வுகளை எப்போது நடத் ்தலாம் என்பதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
முகக்கவசம் அணியாத 7,616 பேருக்கு அபராதம்
சென்னை, ஜன. 9 - சென்னையில் முகக்க வசம் அணியாத 7,616 நபர்களி டமிருந்து 15 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப் ்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் புயல் வேகத்தில் பரவிவரு கிறது. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், ஒமைக்ரான் தொற்று பரவா மல் தடுக்கவும் தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. கொரோனா, ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முகக்கவசம் அணி யாமல் வெளியே வருபவர் ்களை ஆங்காங்கே சிறப்பு குழுவினர் பிடித்து 200 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். அதன்படி, சென்னையில் சனிக்கிழமையன்று (ஜன.8) முகக்கவசம் அணியாத 7 ஆயிரத்து 616 பேரிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.