அரசு பேருந்து மோதி வாலிபர் பலி
அணைக்கட்டு. ஆக. 27- பள்ளிகொண்டாவை அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விவேக் (29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பணியை முடித்துவிட்டு வியாழக்கிழமை (ஆக.27) இரவு தனது இரு சக்கர வாகனத்தில் வேலூரிலிருந்து திப்பசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பள்ளிகொண்டா தேசிய நெடுஞ் சாலையில் இருந்து இணைப்பு சாலையில் சென்று கொண்டி ருக்கும் போது, திருப்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இருச்சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விவேக் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிகொண்டா காவல் துறையினர் விவேக் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காரீப் பருவ காப்பீடு: வேளாண்துறை வேண்டுகோள்
செங்கல்பட்டு, ஆக. 27- காரீப் பருவக் காப்பீடு திட்டத்தில் பங்கேற்று தகுதியுள்ள விவசாயிகள் பயன்பெற வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் எல்.சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் காரீப் பருவத்திற்கான 2021ல் ஒன்றிய - மாநில அரசின் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது . இத்திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகள் சேர்ந்து பலன் பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முனைவர்.எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காப்பீடு திட்டத்தில் மணிலா பயிரிடும் விவசாயிகள் அனை வரும் (குத்தகை விவசாயிகள் உட்பட) சேரத் தகுதி உடைய வர்கள். விதைக்க, நடவு செய்ய இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்து விடுதல், இயற்கை இடர்பாடுகள், இடர் துயர் அபாய நிகழ்வுகள், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு போன்றவை களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் ஆகிய தகவல்களுடன் நடப்பு சிட்டா சாகுபடி அடங்கல், முன் மொழிவு படிவம், பதிவு படிவம் ஆகியவற்று டன் நிலக்கடலை பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 576 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். காப்பீட்டு தொகை ரூபாய் 28,800 எனவும், பயிர் காப்பீடு செய்திட கடைசி தேதி 31.8.2021 எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை நாடகம்: 3 பேர் கைது
சென்னை, ஆக. 27- சென்னை அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (28). இவர் விமான நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கி, செல்போன், இருசக்கர வாகனம், அதிலிருந்த 8 பார்சல்களை பறித்து சென்றதாக கடந்த 23ஆம் தேதி பல்லாவரம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் சரவணனிடம் அந்த 8 பார்சல்கள் குறித்து நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சரவணன் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அந்த பார்சல்களில் தங்கக் கட்டிகள் இருந்ததைத் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து வந்த தங்க கட்டிகளை, தனது நிறுவன உரிமையாளர் இம்ரானி டம் ஒப்படைக்க சென்றபோது நண்பர்களுடன் சேர்ந்து அப கரிக்க நினைத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர், சரவணனுடன் பணிபுரி யும் பிரபுராம் (37), விமான நிலைய சோதனை பிரிவில் பணிபுரி யும் முகமது நஷீத் (25) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்துபவர்களுக்கு உதவி வந்தது தெரிய வந்தது. மேலும் கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டது திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷேக்முகமது, அவரது நண்பர்கள் இஸ்மாயில், மணி என்பதும் தெரியவந்தது. கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்புடைய 9 கிலோ தங்கத்தை பிரபுராமிடம் அவர்கள் கொடுத்ததும் தெரிய வந்தது. இதை யடுத்து காவல் துறையினர் அந்த தங்கத்தை பறிமுதல் செய்த னர். தலைமறைவாக உள்ள ஷேக், இஸ்மாயில், மணி, துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வரச் செய்த இம்ரான் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.