போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.பகத்சிங்தாஸ் தலைமையில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்.ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், தமிழரசி, வி.அரிகிருணன், மாவட்டகுழு உறுப்பினர். வி.நாராயணன், செங்கல்பட்டு பகுதி செயலாளர். கே.வேலன் உள்ளிட்ட பலர் பேசினர்.