districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையை மகிழ்வித்த சாரல் மழை

சென்னை, மே 1- சென்னையில் சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி யடைந்தனர். தமிழ்நாட்டில் கோடை வெப்பம் பொது மக்கள் வாட்டி வதைக்கிறது. பொதுமக்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் பல்வேறு மாற்று வழிகளை தேடி வெப்பத்தை சமா ளித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. சென்னையில் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 30) இரவு லேசான மழை பெய்தது. திங்கட் கிழமை காலை திருவொற்றியூர்,  தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம் பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம் பேட்டை, தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதி யில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தோழர் எஸ்.நன்மாறன் நினைவு கல்வெட்டு திறப்பு

சென்னை, மே 1 - 137வது நினைவு தினமான திங்களன்று (மே 1) தி.நகர் பகுதி, 133வது வட்டம், முத்துரெட்டி தோட்டத்தில் தோழர் எஸ்.நன்மாறன் நினைவு கல்வெட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பா.ஜான்சி ராணி திறந்து வைத்தார்.  பி.சாந்தி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், 133வது வட்ட கிளைச் செயலாளர்கள் கே.ஜோதி, என்.வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

சேற்றில் சிக்கிய மாணவரை மீட்ட தீயணைப்பு படை

சென்னை,மே 1  முகப்பேர் கிழக்கு, கண்ணதாசன் சாலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது ஒருவர் அடித்த பந்து அருகில் உள்ள மழைநீர் கால்வாய்க்குள் விழுந்தது. அதனை எடுப்பதற்காக மாணவர் சென்றபோது அங்கிருந்து சகதியில் சிக்கிக்கொண்டார். அவரால் வெளியே  வர முடியவில்லை. நண்பர்கள் மீட்க முயன்றும் முடிய வில்லை. மேலும் மாணவர் தொடர்ந்து சேற்றுக்குள் மூழ்க தொடங்கினார். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு நிலை யத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி சிவஞானம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கயிறு கட்டி சுமார் அரை மணிநேரம் போராடி மாணவரை பத்திரமாக மீட்டனர். சரியான நேரத்தில் வந்து மாணவரை மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

பாலியல் தொந்தரவு: சிறார்கள் கைது

விழுப்புரம்,மே 1- விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக் குட்பட்ட ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 6 வயதுடைய 5 குழந்தை களுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 14 வயது முதல் 17 வயதுடைய 4 இளஞ்சிறார்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அந்த இளஞ்சிறார்களை கைது செய்தனர் பிறகு, மாவட்ட இளஞ்சிறார் மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.