சென்னை, பிப். 11 - பராமரிப்பு பணி காரண மாக புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட் டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரி வித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் கடம்பத்தூர் மற்றும் திருவாலங் காடு இடையே, பிப்.14, 15, 16, 17, 18, 21, 22, 23 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணி முதல் மதியம் 1.15 மணி வரையிலும், 19ஆம் தேதி காலை 11.35 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அவ்வழியாக இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி மூர் மார்க்கெட் - அரக்கோணம் (66047) இடையே காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர் மார்க்கெட் - திருத்தணி (43507) இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர் மார்க்கெட் - அரக்கோணம் (43413) இடையே காலை 11 மணிக்கு இயக் கப்படும் ரயில், மூர் மார்க்கெட் - அரக்கோணம் (43509) இடையே காலை 9.50 மணிக்கும் இயக்கப் படும்ரயில் உள்ளிட்ட புறநகர் மின்சார ரயில்கள் இந்த குறிப்பிட்ட தேதிகளில் செஞ்சி பனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிற்காது. அதேபோல், வேளச் சேரி - திருத்தணி (43941) இடையே காலை 11.20 மணிக்கு இயக்கப் படும் ரயிலானது வருகிற 19ஆம் தேதி செஞ்சி பனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிற்காது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.