புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த சிஎச் பாலமோகனனின் 76 வது பிறந்த நாளையொட்டி நோணாங்குப்பத்தில் உள்ள சுண்ணாம்பாறு கரையோரம் பனை விதை நடவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கவுரவத் தலைவர் பிரேமதாசன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சம்மேளன நிர்வாகிகள் சீத்தாராமன், ஞானசேகரன், வானவரம்பன், முனுசாமி, ஜவஹர்,லலிதா, சத்யா, உட்பட பலர் பங்கேற்றனர்.