சென்னை, ஏப். 29 - சென்னை மற்றும் புற நகர் தையல் தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட 3வது பேரவை ஞாயிறன்று (ஏப்.28) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.டி.ராஜேந்திரன் தலை மையில் நடைபெற்ற இந்த பேரவையை சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.தயாளன் துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சுந்தரம் வேலை அறிக்கையும், பொருளாளர் கே.எஸ். ஜீவானந்தம் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.திரு வேட்டை பேரவையை நிறைவு செய்து பேசினார். மாவட்டத் துணைத் தலை வர் எம்.குணசேகரன் நன்றி கூறினார். முன்னதாக மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஆனந்தன் வரவேற்க, துணைச் செயலாளர் எம்.விஜயா அஞ்சலி தீர்மானத்தையும் வாசித்தனர். மாவட்ட தலைவராக பி. சுந்தரமும், பொதுச் செய லாளராக எம்.ஆனந்தனும், பொருளாளராக கே.எஸ். ஜீவானந்தமும் தேர்வு செய்யப்பட்டனர்.