districts

img

சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, நவ. 25- சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுப்பு நடைபெறும் என்றும், தெரு வில் வெறிநாய் இருந்தால் மாநகராட்சியிடம் உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். டிசம்பர் மாதம் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பருவமழை கால மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் பணிச்சுமை காரண மாக இந்த மருத்துவ முகாம் சனிக் கிழமைக்கு மாற்றப்பட்டது. 5ஆவது வார மாக மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை முகாம் நடைபெற்றது. சென்னை தேனாம் பேட்டையில் நடைபெற்ற முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், ராயபுரத்தில் ரேபிஸ் தொற்று கொண்ட நாய் கடித்தவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும், சென்னை முழுவதும் உள்ள நாய்களின் எண்ணிக்கை  கணக்கெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தெரு நாய்களுக்கு 2ஆம் கட்ட தடுப்பூசி போடப்படும் என்றும், வெறிநாய் இருப்பதை அறிந்தால் மக்கள் உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். செந்தில்பாலாஜியின் உடல் நிலை குறித்து கேட்ட கேள்விக்கு, அவருக்கு கால்வலி, தலைவலி போன்ற பிரச்னைகள் இருப்பதாகவும், ஒவ்வொரு துறையை சார்ந்த மருத்துவர்களும் ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார். தற்போது பிசியோ ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் மா.சுப்பிரமணியம் கூறினார். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆயிரம் விளக்கு சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன், மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.