காசநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் உலக காசநோய் ஒழிப்பு தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் காசநோய் பற்றி அறிந்து கொள்ள இலவச சேவை எண் 1800116666 அறிமுகப்படுத்தப்பட்டது.