districts

img

திருவண்ணாமலை சிபிஎம் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஜோடிக்கு சாதி மறுப்பு திருமணம்

திருவண்ணாமலை, செப்.17- வேலூர் மாவட்டம், கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் (23). இவர் பார்வை திறன் மாற்றுத்திறனாளி.  சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் பட்டம் பெற்றுள்ளார். தற்போது கணினி அறிவியல் படித்து வரு கிறார். அதேபோல்,  திருவண்ணாமலை மாவட்டம், பெரிய கல்லபாடி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவரும் பார்வை திறன் கொண்டவர். சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் மற்றும் திருவள்ளூர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் முடித்துள்ளார். அஜித் குமார் - அனிதா இருவரும் பள்ளி பருவத்திலேயே பழகி உள்ளனர். பிறகு, இணைந்து வாழ முடிவு செய்துள்ளனர். அதன்படி, செப்டம்பர். 14, திங்களன்று திருவண்ணாமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. செல்வன்,  திருவண்ணாமலை நகரச் செயலாளர் எம். பிரகலநாதன், திரு வண்ணாமலை ஒன்றியச் செயலாளர் எஸ். ராமதாஸ், வழக்கறிஞர் எஸ். அபிராமன், வட்டார செயலாளர் ஆர். அண்ணாமலை, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் சிவாஜி, ரமேஷ் பாபு, சத்யா, விவசாயிகள் சங்க நிர்வாகி அருண்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  இந்த சாதி மறுப்பு திருமணத்தில், மண மக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.