districts

சென்னை முக்கிய செய்திகள்

பாலின சமத்துவ நடை நிகழ்வு நடத்திய சிபிஎம் தலைவர்கள் மீது வழக்கு பதிவு

சென்னை, நவ. 18 - பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதியேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது காவல்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. சிபிஎம் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், நவ.16 அன்று இரவு அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ‘இரவும் எமக்கானதே’ எனும் முழக்கத்தோடு பாலின சமத்துவ நடை நடத்த முற்பட்டனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன்பேரில், திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. நிகழ்வில் பங்கேற்ற அ.சவுந்தரராசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழும், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உட்பட 40க்கும் மேற்பட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்

சென்னை, நவ.18- சென்னையில் நூற்றுக்  கணக்கான பேருந்து நிறுத்த  ங்களை இடமாற்றம் செய்ய போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. சென்னையில் சிக்னல் மற்றும் மேம்பாலங்களுக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க நட வடிக்கை எடுக்க உள்ளது. முதல் கட்டமாக பாரி முனை - முகப்பேர், வடபழனி, தரமணி வழித்தடங்களில் ஆய்வு செய்து மாநகராட்சியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

லாரி மோதி பெண் பலி

சென்னை, நவ. 18- சென்னை கோவிலம் பாக்கம் கலைஞர் சாலையை சேர்ந்தவர் தன பாக்கியம் (45). இவர் வீட்டு வேலை செய்து வந்தார்.  தனபாக்கியம், திங்கட் கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக வடக்கு பட்டு பிரதான சாலை, மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வடக்குபட்டு சாலையில் இருந்து கோவிலம்பாக்கம் செல்ல திரும்பிய லாரி, பாக்கி யம் மீது மோதியது. இதில் கீழே விழுந்த பாக்கியம் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியானார். லாரி ஓட்டுநர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடினார். காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய லாரி இன்னும் பதிவு செய்யப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடுக: மின் அரங்க இடைக்கமிட்டி மாநாடு வலியுறுத்தல்

சென்னை, நவ. 18- மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் நட வடிக்கையை கைவிட வேண்டும் என சிபிஎம் மின் அரங்க இடைக்கமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது. சிபிஎம் வடசென்னை மாவட்டம், மின் அரங்க இடைக்கமிட்டி மேற்கு  2ஆவது மாநாடு அம்பத்தூரில் தோழர்கள் என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி, சு.லெனின் சுந்தர் நினைவரங்கில் திங்களன்று (நவ. 18) நடைபெற்றது. மூத்த உறுப்பினர் அச்சுதன் கட்சிக் கொடியை ஏற்றினார். பி.எஸ்.முனியாண்டி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எல்.பி.சரவணதமிழன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இடைக்கமிட்டிச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் வேலை அறிக்கையையும், நிதி பொறுப்பாளர் டி.கே.சம்பத்ராவ் வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக எஸ்.எஸ்.கணேஷ்ராவ் வர வேற்றார். ஜி.குப்பன் நன்றி கூறினார். தீர்மானங்கள் மின் ஊழியர்கள் நலனை பாதிக்கும் அரசாணை 100 இன் மூலம் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும், வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவதை கைவிட வேண்டும், மின்சார வாரியமே மின் உற்பத்தியை தொடங்க வேண்டும், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உட்பட 2 பேர் காயம்

சென்னை,நவ.18-  சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உட்பட 2 பேர் காய மடைந்த சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ள னர். சென்னை வியாசர்பாடி பகுதியில் இரு வேறு இடங்களில் மாஞ்சா நூல் அறுத்து இருசக்கர வாகனங்களில் சென்ற இருவர் காயமடைந்தனர். தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் அமர்ந்து சென்ற இரண்டரை வயது குழந்தை மற்றும்  தொழிலாளி என இரண்டு நபர்கள் காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் திட்டம்: பொதுமக்களிடம்  கருத்து கேட்பு

சென்னை, நவ.18-  சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறு வனங்களில் இருந்து வெளி யேற்றப்படும் அனைத்து வீட்டு உபயோக நீர் மற்றும் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு சுத்திகரிப்பு நிலையம் மூலம் மறுசுழற்சி செய்து மீண்டும் மாற்றுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் பின்பற்றப்படுகிறது. இதனால் நீர் + நகரம் எனும் தரநிலையை அடைய சென்னை மாநக ராட்சி சார்பில் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, solid waste corp7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம், என  மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சவரனுக்கு ரூ.480 தங்கம் விலை உயர்வு சென்னை, நவ.18- சென்னையில் திங்க ளன்று 22 கேரட் ஆப ரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,995-க்கு விற்பனை செய்யப்படு கிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படு கிறது.

நகராட்சி பூங்காவை சீர்குலைத்து வணிக வளாக கட்டுமானம் தடுத்து நிறுத்த துணை முதல்வருக்கு கடிதம்

திருவள்ளூர், நவ.18- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, சூழல் சமநிலையை பாதுகாக்கவும் பூங்காக்களை அதிகரிக்கவும் நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. அதன்படி, சென்னை கலை ஞர் செம்மொழி பூங்கா, கிண்டி ரேஸ் கோர்ஸ் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்து வரு கிறது. இதற்கு முற்றிலும் எதிராக சென்னைக்கு அருகில் உள்ள திரு வள்ளூர் மாவட்டத்தில் ஒரு பூங்கா விற்குள் வணிக நோக்குடன் கடை களை கட்டும் நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் விதிகளை மீறி செய்து வருகிறது. இந்த சீர்குலைவு நடவடிக்கை குறித்து நகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் விளைவு, கட்டுமானப்பணிகள் வேக வேகமாக நடைபெற்று வருகிறது. இதே வேகத்தில் சென்றால் மிக விரை வில் கட்டுமான பணிகளை முடித்து விடுவார்கள். திருவள்ளுவர் நகராட்சி சி.வி.நாயுடு சாலையில் அமைந்துள்ளது ராஜம்மாள் தேவி பூங்கா. இது, 100 ஆண்டுகளை கடந்த பழமையானது. நகராட்சி நிர்வாகத்தால் பரா மரிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் லட்சகணக்கில் பணம் நகராட்சி நிர்வாகத்தால் செலவு செய்யப்பட்டுள்ளது.  இந்த பூங்கா வில் சிறுவர்கள், மாணவர்கள், உள்ளூர் மக்கள் தினமும் பயன்படுத்தி வருவதால், இந்த பூங்காவை மேலும் அழகுப்படுத்தி பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர, நகராட்சி நிர்வாகமே சீர்குலைப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. வணிக நோக்கத்துடன் பூங்கா விற்குள் கடைகளை கட்டுவதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகமே மேற்கொண்டு வருகிறது. இந்த செயல் நகராட்சி விதிகளை மீறுவதாகும். ஆகவே, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சித் துறை கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகத்துறை அரசு செயலாளர் டி.கார்த்திகேயன் ஆகியோர் தலையிட்டு, பூங்காவை சீரழித்து கடைகள் கட்டுவதை உடனடி யாக தடுத்து நிறுத்த வேண்டும். பூங்காவை மேலும் புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று திருவள்ளூர் நகராட்சி முன்னாள் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ப.சுந்தரராசன் கடிதம் அனுப்பி இருக்கிறார்.