சென்னை, மார்ச் 3 - அங்கன்வாடி ஊழியரை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிப்.27 அன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக விருகம்பாக்கம் பகுதியில் அங்கன்வாடி உதவியாளர்கள் 2 பேர் வீடு வீடாக சென்று கணக்கெடுத்துள்ளனர். அப்போது பசுபதி அவரது மகன் விவேக் ஆகியோர் அங்கன்வாடி உதவியாளர்கள் இரண்டு பேரையும் தாக்கி, முட்டி போட வைத்து சித்தரவதை செய்துள்ளனர். இதனை யடுத்து அங்கன்வாடி உதவியாளர்கள் இரு வரையும், மருத்துவர்களும், அங்கன்வாடி ஊழியர்களும் சென்று மீட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக அன்றைய தினமே விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் காவல்து றையினர் வழக்கு பதியவில்லை என தெரி கிறது. இதனையடுத்து அங்கன்வாடி உதவியா ளர்களின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பசுபதியும், விவேக்கும் அவதூறு பிரச்சாரம் செய்துள்ளனர். இதனால் அதிருப் தியுற்ற அங்கன்வாடி ஊழியர்கள் வியா ழனன்று (மார்ச் 3) காவல் நிலையத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். சமூக வலை தளத்தில் அவதூறு பிரச்சாரம் செய்தது தொடர்பாகவும் புகார் அளித்தனர். இதன் பின்னர், முந்தைய புகாரின் மீது காவல்நிலையத்தில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவு களின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. இரண்டாவது புகாரின் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்தனர். இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சித்திரைச் செல்வி, ஹேமபிரியா, நிர்மலா, ஸ்ரீதேவி, விஜயலட்சுமி, முனீஸ்வரி, கட்டுமான சங்கத் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.