சென்னை, ஏப். 16- மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ராயபுரம், பெரம்பூர், ஆர்.கே. நகர், திரு வொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று புதனன்று (ஏப். 17) வாக்கு சேகரித்தார். உற்சாக வரவேற்புக்கு மத்தியில் அவர் பேசுகையில், வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திருவொற்றியூர், திருவிக நகர், கொளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில், கடந்த 5 ஆண்டுகளில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, தொழிற்சாலை மற்றும் பெரு நிறு வனங்களின் சமூக பாதுகாப்பு நிதி, சென்னை மாநகராட்சி நிதி ஆகியவற்றின் மூலம் பல்வேறு திட்டங்களை செய்துள்ளேன். பேருந்து நிழற்குடை, சமுதாய நலக்கூடங்கள், அங்கன்வாடி மையம், மாநகராட்சி பள்ளிக்கு தேவை யான உபகரணங்கள், ரேசன் கடைகள், பன்நோக்கு கட்டி டங்கள், மாநகராட்சி பள்ளியில் புதிதாக வகுப்பறைகள், பூங்காக்கள் நவீனப்படுத்துதல், உடற்பயிற்சி கூடங்கள், ரயில்வே சுரங்கப்பாதை, ரயில்வே மேம்பாலங்கள், நூலகங்கள் என பல்வேறு திட்டப்பணிகளை சுமார் ரூ.47 கோடி மதிப்பீட்டில் செய்துள்ளேன். திரு வொற்றியூர் தொகுதியில் ரூ.148 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தேன். அதேபோல் பெரம்பூர் தொகுதியில் உள்ள கொடுங்கை யூர் குப்பை கொட்டும் வளாகத்தினால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். அதை கருத்தில் கொண்டு முதலமைச்சரி டம் கூறி 640 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயோ மைனிங் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மீண்டும் என்னை தேர்ந்தெடுத்தால் வடசென்னையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறினார். இதில் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே. எபினேசர், மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ஜெ.டில்லி பாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், ஆர்.ஜெயராமன், ஆர்.லோகநாதன், சிபிஐ மாவட்டச் செயலாளர் தா.கு.வெங்கடேஷ் வேம்புலி, விசிக மாவட்டச் செயலாளர் சவுந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.