districts

img

புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்

சென்னை,ஜன.28- உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, காவேரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் நடைபெற்றது.  பெசன்ட்நகர், ஓல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த ஓட்டத்தில், உடற்பயிற்சி ஆர்வலர்கள், தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  10 கிமீ ஓட்டத்தினை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்து துவக்கி வைத்தார், மேலும் 5 கிமீ ஓட்டத்தினை காவல் துறை உதவி ஆணையர் முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர் டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.