districts

img

சுகாதாரசீர் கேட்டிலிருந்து பாதுகாக்கப்படுமா குடிநீர் தொட்டி?

விழுப்புரம்,ஏப்.28- விழுப்புரம் அருகே மழவராயனூர் பகுதி யில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி யையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியும் சீர் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மழவராயனூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரி பாளையம் எம்ஜிஆர் நகர் தலித் மக்க ளின் பயன்பாட்டில் தான் உள்ளது இந்த நீர்தேக்கத்தொட்டி. இந்த தொட்டியில் நீரை பிடித்து அப்பகுதி மக்கள் துணி துவைத்தல், நீர் பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தி வரு கின்றனர். இந்நிலையில் இந்த நீர் தொட்டியில் இருந்து வெளியேறும் நீர் அப்பகுதியை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால் சேரும் சகதியு மாக மாறியுள்ள நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த சுகாதார சீர்கேட்டை உடனே சரிசெய்யப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். ஆனால், இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆதலால் அப்பகுதி தலித் மக்கள் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்கு பெருந்திரளாக திரண்டு மனு கொடுக்க உள்ளதாகவும் மேலும் வலுவான போராட்டம் நடத்த இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.