districts

img

பொதுத்துறையை தனியார்மயமாக்கும் பாஜகவுடன் பாமக கூட்டு சேரலாமா?

கடலூர், ஏப்.9- அரசியல் பிழை செய்த அதிமுக, பாமகவை தமிழக  மக்கள் மன்னிக்க மாட்டார் கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் காட்ட மாக பேசினார். கடலூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் எம்.கே.விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நெய்வேலியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது. பாமக தலைவர் காலை யில் ஒரு கட்சியுடன் பேச்சு வார்த்தை, மாலையில் மற்றொரு கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதியில் பாஜக உடன் கூட்டணி வைத்துவிட்டார். கடலூர் தொகுதியில் பாமக சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். நல்ல இயக்குநர் கெட்ட கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். நெய்வேலி பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்காக நாங்களும் போராடி வருகி றோம். ஆனால், பொதுத் துறை நிறுவனத்தை தனியார் மயமாக்கக்கூடிய பாஜகவு டன்  அவர்கள் கூட்டணி வைப்பது சரிதானா?. 2014-இல் ஆட்சிக்கு வந்த பாஜக  10 ஆண்டுகளில் 17 சதமான  பங்குகளை விற்பனை செய்துள்ளது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்  என்எல்சியை கூறுபோட்டு விற்று விடுவார்கள். அத்தகைய பாஜகவோடு பாமக கூட்டு சேர்ந்துள்ளது. அரசியல் பாவத்தை செய்த அதிமுக, பாமகவை தமிழக  மக்கள் எப்படி மன்னிப்பார் கள் என்று அவர் வினவி னார். நெய்வேலி ஆர்ச்சிகேட் அருகே நடைபெற்ற பிரச் சார கூட்டத்திற்கு சிபிஎம் நகர செயலாளர் ஆர்.பால முருகன் தலைமை தாங்கி னார். மாவட்ட குழு உறுப்பி னர் டி. ஜெயராமன் வரவேற் றார். மாவட்ட குழு உறுப்பி னர்கள் எம். சீனிவாசன், வி.மேரி, பி. மாதவி ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.  நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்தி ரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம், எஸ்.திரு அரசு, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர். நிறைவாக எம்.அன்பழகன் நன்றி கூறினார். முன்னதாக அறிவியல் இயக்க கலை குழுவினரின் தப்பாட்டம், ஒயிலாட்டம் நடைபெற்றது.