districts

img

சிபிஎம் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம்

விழுப்புரம், மார்ச் 31- விழுப்புரம் மாவட்டம், திருக் கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் முன்னாள் அமைச்சர் க.பொன் முடியை ஆதரித்து  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டம் வீரபாண்டி யில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைச் செயலாளர்  டி.ராமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமுஏகச வின் மாநில துணை செயலாளர் சுந்தரவள்ளி கலந்துகொண்டு திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.பொன்முடிக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்  என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்  குழு உறுப்பினர் சு.வேல்மாறன், ஒன்றியச் செயலாளர் எம்.முத்து வேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.தாண்டவராயன், வி.உமா மகேஸ்வரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு வேட்பாளரை வாழ்த்திப் பேசினர்.

;