கடலூர்- புதுவை- சென்னை இருப்பு பாதைத்திட்டத்தை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடலூர் அனைத்து கட்சி - குடியிருப்போர் அமைப்பு அமைப்புகளின் சார்பில் மார்ச் 2 கடலூரில் ரயில் மறியல் நடைபெற உள்ளது. அதனை விளக்கும் வகையில் கடலூர் லாரன்ஸ் சாலையில் கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், விசிக மாவட்ட செயலாளர் செந்தில், நகர செயலாளர் ராஜதுரை, மாநில நிர்வாகி ஸ்ரீதர், ராஜு(மதிமுக), அருள் பாபு (தவாக), நாகராஜ், பாக்யராஜ்(சிபிஐ), பாலு,ரவிச்சந்திரன்(மக்கள்அதிகாரம்), மருதவாணன் (குடியிருப்போர் சங்கம்) , ரவி (பொதுநலஅமைப்பு), குரு ராமலிங்கம் (தனியார்பேருந்துதொழிலாளர்சங்கம்), சுப்பராயன் (மீனவர் பேரவை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.