சென்னை, பிப். 22 - ஒன்றிய அரசு நிதி வழங்க மறுப்பதை எதிர்த்து ஒன்றுபட்டு இயக்கம் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகராட்சி மன்றக்குழுத் தலைவர் ஆர்.ஜெயராமன் கூறினார். பெருநகர சென்னை மாநகராட்சியின் 2024-25ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் வியாழனன்று (பிப்.22) நடை பெற்றது. இதன்மீது ஆர்.ஜெய ராமன் பேசியது வருமாறு: நிதிநிலை அறிக்கையில் மேயர் அறிவித்துள்ள 82 அறிவிப்புகளை யும் அதிமுக, பாஜக உள்ளிட்டு அனைவரும் வரவேற்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது; மார்க்சிஸ்ட் கட்சியும் வரவேற்கிறது. கல்வி என்ற தலைப்பின் கீழ் மேயர் பலகோடி ரூபாய் மதிப்பி லான அறிவிப்புகளை வெளியிட் டுள்ளார். ஆனால், நிதி நிலை அறிக்கையில் ரூ.5.8 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியானால், நிதிப் பற்றாக் குறையை எப்படி சரி செய்யப் போகிறோம்? மாநகராட்சிக்கு கூடுதலான நிதி தேவை உள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கா மல் உள்ளது. அதை ஏன் குறிப்பிட வில்லை? ஒன்றிய அரசு, மாநில அரசுகளை நிர்பந்தித்து மக்கள் மீதான வரியை உயர்த்த வைக்கிறது. சொத்துவரியை உயர்த்த வேண்டும், வரியை செலுத்த காலதாமதம் செய்தால் ஒரு விழுக்காடு அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் வழங்கப்படும் என்று 15வது நிதி ஆணையத்தின் வாயிலாக ஒன்றிய அரசு நிர்பந்தித்தது. துணைமேயர் மு.மகேஷ்குமார் (குறுக்கீடு): ஆண்டு தோறும் சொத்து வரியை 6 விழுக்காடு உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியது. அதனை தமிழக முதல மைச்சர் ஏற்க மறுத்துவிட்டார்
நிதி வழங்க மறுப்பு
ஆர்.ஜெயராமன்: ஒன்றிய அரசின் நிர்பந்தத்தை நிறைவேற்றிய பிறகும் உள்ளாட்சிகளுக்கான வழங்க வேண்டிய நிதியை வழங்க வில்லை. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை, மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதை எதிர்த்து கடுமையாக குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். ஒன்றிய ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டு பாஜக, பிற்போக் குத்தனமான காரியங்களை செய்ய வைக்கிறது. மக்கள் மத்தியில் செல்லும்போது அவர்களின் கோபம் நம்மீது திரும்புகிறது. இவ்வளவும் செய்துவிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை, வரியை ஏன் உயர்த்தினீர்கள்? என்று கேட்கிறார். எனவே, ஒன்றிய அரசிடம் இருந்து நிதியை பெற இணைந்து இயக்கம் நடத்த வேண்டியுள்ளது.
அரசு உதவிப்பெறும் பள்ளி
அரசு உதவிப்பெறும் பள்ளி களில் பணியாற்றுவோருக்கு மாநகராட்சி ஊதியம் தருகிறது. ஆனால், நிர்வாகம் செய்யக்கூடிய வர்கள் பள்ளி நிலத்தை வணிக வளாகமாக பயன்படுத்துகின்றனர். வணிக கட்டிடங்கள் கட்டுவதை அனுமதிக்கக்கூடாது. மாநகராட்சி சமூக நலக்கூடங் களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வாடகை யில் மக்களுக்கு தருகிறோம். ஆனால் அலங்காரம் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். வடிகால்வாய் கடலில் தண்ணீர் சென்ற சேரும் முகத்துவாரம், ஈர நிலங்களை தனி யார் தொழிற்சாலைகளால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. சாம்பல் கழிவு களால் கால்வாயை மூடியுள்ளது. கால்வாய் பணிகளுக்கு ரூ.40 கோடி துக்கப்பட்டுள்ள நிலையில், இதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றை சரிசெய்யாவிட்டால் தண்ணீர் சென்று கடலில் கலக்காது. பக்கிங்காம் கால்வாயின் கரைகளை உயர்த்தினால், குடியிருப்புகளுக் குள் தண்ணீர் வருவதை தடுக்க முடியும். குடியிருப்புகளுக்கு வரி அரசு நிலங்கள், நீர்நிலை களில் மக்கள் குடியிருக்கின்றனர். மேற்கட்டுமானம் செய்துள்ள இடங்களில் சாலை, தெருவிளக்கு கள் அமைத்துள்ளோம். ஆனால், வரி விதிக்காமல் உள்ளோம். இதனால் அங்குள்ள மக்களால் மின் இணைப்பு பெற முடியவில்லை. கழிவுநீர், குடிநீர் இணைப்பு கிடைக் கவில்லை. எனவே, மேற்கட்டு மானத்திற்கு மட்டும் வரி விதித்தால் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். மக்களின் அடிப்படை தேவைகளும் பூர்த்தியாகும். சட்டமீறல்? அண்மையில் காலநிலை மாற்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடற்கரையோரம் சாலை அமைக்க, மக்கள் குடியிருப்பு கட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (சிஆர்இசட்) அனுமதி மறுக்கிறது. ஆனால், திருவொற்றியூர் சுங்கச்சா வடி அருகே 23 அடுக்குமாடி வீடு கட்டுகிறார்கள். இது எப்படி நடக்கிறது?
வரி ஏய்ப்பு
மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையாக உள்ளது. மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள் வாயிலாக எவ்வளவு வரி வந்துள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். வரி ஏய்ப்பு செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து முழுமையாக வரியை வசூலிக்க வேண்டும். திருவொற்றியூர் மேற்கு பகுதி யில் குடிநீர் பிரச்சனை உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ வாட்டர் நிர்வாகத்துடனும் பேசப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை பெற்று அங்கே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். மண்டல அலுவலரால் 10 லட்சம் ரூபாய் வரை உள்ள பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும். இந்த அளவை உயர்த்த வேண்டும். ஏரியா சபை கூட்ட செலவுகளுக்கான தொகையை ஒதுக்க வேண்டும். கத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை 10 படுக்கை கொண்ட தாக மேம்படுத்துவதை வரவேற்கி றோம். அதை 50 படுக்கை கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்த வேண்டும். ஏற்கெனவே, கத்திவாக் கம் மற்றும் ராமநாதபுரம் மருத்துவ மனைகளில் மகப்பேறு மருத்துவம் பார்க்கப்பட்டது. அதை அதிமுக ஆட்சியில் நிறுத்திவிட்டார்கள். எனவே, அந்த மருத்துவமனைகளில் மகப்பேறு பிரிவை கொண்டு வர வேண்டும். 98வது வார்டு உதவி பொறியாளர் அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொள்கிறார். எனவே, புதிய உதவி பொறியாளரை நியமிக்க வேண்டும். மேயர் ஆர்.பிரியா: ஏரியா சபை கூட்டங்களை நடத்த வார்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயராமன்: அந்த பணம் இதுவரை கிடைக்கவில்லை. என்யுஎல்எம் தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ராம்கே, உபேசர் போன்ற நிறுவனங் களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.