சென்னை, பிப்.25- சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடை பெற்றன. இதன் காரணமாக ஞாயிறன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளின்தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் ஞாயிறன்று கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதையடுத்து சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும், மறு வழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு, கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும், மறு வழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும் என 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்தனர். இதையடுத்து பயணிகள் மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்ப தற்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் காலை 10 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட்டது.