districts

img

சென்னை அணுமின் நிலையம் சார்பில் அரசு பள்ளிக்கு கட்டிடம்

திருக்கழுக்குன்றம், ஜன. 4- செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி கிராமத்தில் உள்ள அரசினர் நடுநிலை பள்ளிக்கு கூடுதல் பள்ளி கட்டிடம் வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் அணுமின் நிலைய பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா தலைமை ஆசிரியர் பல்கீஸ்பேகம் தலைமையில் வியாழனன்று (ஜன. 4) நடைபெற்றது. அணுமின் நிலைய இயக்குனர் சுதிர்க்கே செல்கே பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இரும்புலிச்சேரி கிராமத்தை பூர்வீகமாக கொண்டு கேளம்பாக்கத்தில் குடியிருக்கும் சமூக சேவகர் கே.ஏ.டி.அன்பு மாணவர்களுக்கு தேவையான உப கரணங்களை தலைமை யாசிரியரிடம் வழங்கினார்.