திருவள்ளூர், ஜூலை 9- ஆர்.கே.பேட்டை, எஸ்.வி.ஜி.புரத்தில் வீடுகள் இடித்து தள்ளப்பட்ட இடத்திலேயே பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களுக்கும் உடனடியாக வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று (ஜூலை 8), ஆர்.கே.பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள எஸ்.வி.ஜி.புரத்தில் 2000 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் நிலம் கையகப்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதில் அனைத்து சமுகத்தை சேர்ந்த மக்களுக்கும் வரு வாய்த்துறையினர் பட்டா வழங்கி யுள்ளனர். பல்வேறு காரணங்களால் அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் அம்மக்கள் குடியேற முயல வில்லை. இந்த சூழலில் கடந்த ஒரு மாதமாக எஸ்.வி.ஜி.புரத்தில் வீடு களை கட்டி வாழ்ந்து வருகின்றனர். திடீரென ஜுலை 4 அன்று 54 வீடு களையும் வருவாய்த் துறையினர் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு இடித்து தரைமட்டமாக்கினர். வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய இந்த அராஜகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்.கே. பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அப்போது இடிக்கப்பட்ட 54 வீடுகளையும் எஸ்.வி.ஜி.புரத்தில் கட்டி கொடுக்க வேண்டும், இடிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர். இதற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் உட்பட்ட பலர் பேசினர்.