districts

img

பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங் வெட்டி படுகொலை

சென்னை, ஜூலை 5- சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னை பெரம்பூர் முரசொலி மாறன் பாலம் அருகில் இவரது வீடு உள்ளது. வெள்ளிக்கிழமை ஜூலை 5 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் ஆம்ஸ்டிராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த ஆம்ஸ்டிராங்க், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். சட்டப்படிப்பை முடித்த ஆம்ஸ்ட்ராங் 2000ஆம் ஆண்டில் அரசியலுக்கு வந்தவர். 2006ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தனித்துப்போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டு (2007) பகுஜன் சமாஜ் கட்சி தவைரானார். அதன் பிறகு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார்.