districts

சாலை விபத்தில் சகோதரர்கள் சாவு

கடலூர், ஜூலை 19- பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் வெங்கடேசன் (40). அவரது சகோதரர் வடிவேலு (29) போலீஸ் லைன் பகுதியில் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் பணிக்கங்குப்பம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள மண் சாலையில் இருந்து பண்ருட்டி மார்க்கமாக செல்ல வண்டியை திருப்பி உள்ளனர்.  அப்போது, அதே திசையில் வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வடிவேல் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.  பின்னால் அமர்ந்திருந்த வெங்கடேசன் முதுகில் சக்கரம் ஏறியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.  இருவரது உடலும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக அனுமதிக்கப்பட்டது.  இதுகுறித்து காடாம்புலியூர்  காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

;