districts

img

தமிழ் எழுத்தாளர்களை உலகளவில் அறிமுகப்படுத்தும் மேடையாக புத்தகக் காட்சி

சென்னை, ஜன. 17- சென்னையில் இரண்டாவது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதில் என்ன சிறப்பம்சம் உள்ளன என்றும், வழக்கமான புத்தகக் காட்சியில் இருந்து பன்னாட்டு புத்தகக் காட்சி எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பது பற்றியும் ஒரு பார்வை. மக்களிடம் பெரும் எதிர் பார்ப்பை பெற்றுள்ள சென்னை புத்தக கண்காட்சி வரும் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலை யில் சென்னையில் 2ஆவது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் செவ்வாயன்று (ஜன. 16) தொடங்கி வியாழக்கிழமை (ஜன 18) வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு புத்தகக் காட்சியில் 30 நாடுகள் வரை பங்கேற்றன. இதில் 120 நூல்கள் வெவ்வேறு மொழி களில் மொழி பெயர்ப்பு செய்வ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் கையெழுத்தாகி இருந்தன. அவற்றில் 52 நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த ஆண்டு நடைபெறும் புத்தகக் காட்சியில், தொடக்க காலம் முதல் தற்போதைய செயற்கை நுண்ணறிவு வரை எழுத்துகள் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளன என்பது குறித்து மையப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. புத்தகக் காட்சியில் 80 அரங்கு கள் இடம்பெற்றுள்ளன. இறுதி நாளில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 200 புத்தகங்கள் வெளியிடப்பட வுள்ளது. பன்னாட்டு புத்தகக் காட்சியில் மலேசியா, கனடா, பிரிட்டன், இந்தோனேசியா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, பின்லாந்து, இத்தாலி, துருக்கி, சவுதி அரேபியா, கிரேக்கம், லெபனான், வடக்கு மாசிடோனியா, ஸ்லோவேனியா, லிதுவேனியா, லாத்வியா, செனகல், செர்பியா, பிரேசில், மயன்மார், அல்பேனியா, தான்சானியா, நியூசிலாந்து, ஆர்மீனியா, ஜார்ஜியா, போர்ச்சுக்கல், வங்கதேசம், தாய்லாந்து, வியட்நாம், போலந்து, பிலிப்பைன்ஸ், எகிப்து, ஈரான் ஆகிய நாடுகளும்,  இந்தியாவில் இருந்து 10 மாநிலங்களும் பங்கேற்றுள்ளன. பல்வேறு கலாச்சாரப் பின்னணி யில் உள்ளவர்களுடன் உள்நாட்டுப் பதிப்பாளர்கள் தொடர்பு கொள்ள வழிவகுப்பதால், இது இருதரப்புக்கும் உலகச் சந்தையைத் திறந்துவிடுகிறது. மேலும் பல இலக்கியப் படைப்பு களின் பரிமாற்றத்தை எளிதாக்கு கின்றன. உலகில் உள்ள பல்வேறு இலக்கிய மரபுகள், மொழிகளை ஆராய வாசகர்களுக்கு வாய்ப்ப ளிக்கிறது. சர்வதேசப் புத்தகக் காட்சியில் காட்சிப்படுத்துவதன் மூலம் வெளியீட்டாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஒரு பெரிய அறிமுகம் கிடைக்கும். படைப்பாளர்களின் புதிய தலைப்பு களை உலகளவில் அறிமுகப் படுத்த இது ஒரு நல்ல தளத்தை வழங்குகிறது. தமிழ் எழுத்தாளர்களை உலகளவில் அறிமுகம் செய்யும் மேடையாக இந்த பன்னாட்டு புத்தகக் காட்சி அமைந்துள்ளது.