districts

img

போச்சம்பள்ளியை பேரூராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் சிபிஎம் மாநாடு வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, நவ.1-  போச்சம்பள்ளி ஊராட்சியை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்த வேண்டும். அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும், அரசு கொள்முதல் நிலையம் அமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போச்சம்பள்ளி வட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் போச்சம்பள்ளி வட்ட 9 வது மாநாடு  வஜ்ரவேல், மாதையன் தலைமையில் தோழர்கள் சீதாராம் யெச்சூரி - என்.சங்கரய்யா நினைவரங்கில் நடைபெற்றது. மூத்த தோழர்.சி.கோவிந்தசாமி கொடியேற்றினார்.  கார்த்திக் அஞ்சலி வாசித்தார். கடல் வேந்தன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கோவிந்தசாமி துவக்க உரையாற்றினார். வட்டச் செயலாளர் கே.சாமு வேலை அறிக்கை வரவு செலவு சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  சி.பிரகாஷ் வாழ்த்தி பேசினார்.  அரசம்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறையால் விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கீடு செய்த இடத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவேண்டும், பாரூரில் இருந்து மஞ்சமேடு வரை கரையோரம் குடியிருக்கும் மக்களுக்கு அரசு மாற்று இடம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டும். போச்சம்பள்ளி வட்ட மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும். அகரம் பகுதியில் குறுகிய வளைவு அருகில் பள்ளிக்கூடம் உள்ளதால் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்க வீடு இல்லாமல் உள்ள அகரம்,போச்சம்பள்ளி பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், பாரூரில் இருந்து மஞ்சமேடு வரை கரையோரம் குடியிருக்கும் மக்களுக்கு அரசு மாற்று இடம் வழங்கி வீடு கட்டி தர வேண்டும்.  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டக்குழு தேர்வு 9 பேர் கொண்ட போச்சம்பள்ளி வட்ட குழுவிற்கு செயலாளராக கே.சாமு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எக்ஸ். இருதயராஜ் நிறைவு உரையாற்றினார்.பெரியசாமி நன்றி கூறினார்.