districts

img

காட்பாடியில் ரத்ததானமுகாம்

வேலூர். டிச.3 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காட்பாடி தாலுகாகுழு சார்பில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திருமணி கிராமத்தில்  ரத்ததானமுகாம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் மறைந்த தோழர் ப.சக்திவேல் நினைவரங்கில் நடைபெற்ற முகாமிற்கு காட்பாடி தாலுகா தலைவர் சங்கர் தலைமைதாங்கினார். செயலாளர் எல்.நவீன் வரவேற்று பேசினார்.மாநில துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் பெ.திலீபன், மாவட்ட செயலாளர்எஸ்.பார்த்திபன் ஆகியோர் பங்கேற்றனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, திருமணி ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை துணைத்தலைவர் பத்மாவதி  இராமமூர்த்தி, அனீஷ் (விசிக), கலையரசன் (திமுக), செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கி சான்றிதழ்களை வழங்கினர். வேலூர் அடுக்கம்பாறைஅரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.