திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்க லஞ்சம் கேட்பதையும் அலுவலக ஊழியர்கள் மரியாதை குறைவாக பேசுவதை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரமேஷ் பாபு, மாநிலப் பொருளாளர் கே. ஆர். சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் சிவாஜி, மாவட்டப் பொருளாளர் சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.