பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வேண்டும், மல்யுத்த வீரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தலைவர் வாசுதேவன், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் பி.ஜி.மூர்த்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் கருணாநிதி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கோவிந்தம்மா, மாதர் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், எல்ஐசி முகவர்கள் சங்க மண்டலத் தலைவர் முருகன் நாயனார் ஆகியோர் கலந்து கொண்டனர்.