மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி கைது
சென்னை, பிப். 20- சினிமா பாடலாசிரியரும் மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகியுமான சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் “சினேகன் பவுண்டேஷன்” என்ற தனது அறக்கட்டளை பெயரில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், நடிகை ஜெய லட்சுமி இணையதளம் மற்றும் சமூக வலை தள கணக்குகள் தொடங்கி பொது மக்களிடம் பணம் வாங்கி வருவதாகவும், இதனால் தனக்கும் தன்னுடைய அறக்கட்டளைக்கும் களங்கம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். சினேகனின் புகரை தொடர்ந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி பாஜக மாநில மகளிர் அணி துணைத் தலைவியும் நடிகையுமான ஜெயலட்சுமி, காவல் ஆணையர் அலுவல கத்தில் எதிர் புகார் அளித்தார். அதில் ‘சிநேகம் பவுண்டேஷன்’ தனக்குத்தான் சொந்தம் என்றும், தான் இதன் மூலம் பல ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருவதாகவும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். இவ்வாறு, ஒருவருக்கொருவர் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகம், திருமங்கலம் காவல் நிலையம் என புகார் அளித்த நிலையில் பின் இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 2022ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகை ஜெயலட்சுமி மீது திருமங்கலம் காவல்துறையினர் மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக பாடலாசிரியர் சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவுபடி 2022 அக்டோபர் 19ஆம் தேதி திருமங்கலம் காவல் துறையினர் சினேகன் மீது அவதூறு பரப்புதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரண்டு வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நடிகையும் பாஜக பிர முகருமான ஜெயலட்சுமி புகாரில் நீதிமன்றம் முகாந்திரம் இல்லை என முடித்து வைத்தது. இந்நிலையில் சினேகன் கொடுத்த புகாருக்கு நடிகையும் பாஜக பிரமுகமான ஜெயலட்சுமி மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ‘சினேகம் பவுண்டேஷன்’ குறித்த ஆவணங்களை பெறுவதற்காகவும் வழக்கு குறித்து விசாரணை செய்வதற்காகவும் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி வீட்டில் செவ்வாயன்று (பிப். 20) காலை முதல் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் அவரை திருமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் சுமார் 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருமங்கலம் காவல் துறையினர் நடிகை ஜெயலட்சுமியை கைது செய்தனர். மேலும் நடிகை ஜெயலட்சுமி தொடங்கிய ‘சினேகம் பவுண்டேஷன்’ அறக் கட்டளையின் ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பல்கலை. வங்கி கணக்கு முடக்கத்தை திரும்ப பெறுக ஆசிரியர் கழகம் கோரிக்கை
சென்னை, பிப். 20 - சென்னை பல்கலைக் கழக வங்கி கணக்குகள் முடக்க நடவடிக்கையினை வருமான வரித்துறை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை பல்கலைக் கழகத்தின் கணக்குகளில் உள்ள தணிக்கை ஆட்சேபணைகள் சரி செய்யப்படும் போது, வழங்கப்படாமல் இருக்கும் நிதியினை அரசு வழங்கலாம். எனவே, வங்கிக் கணக்கு முடக்கத்தால் ஒரு அரசு பல்கலைக்கழகத்தின் அன்றாட செயல்பாடு முடங்குகிறது. ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களுக்கும் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையில், வங்கிக் கணக்கு முடக்கத்தை வருமான வரித்துறை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு தலையிட்டு, பல்கலைக் கழகத்தின் அன்றாட நிதி பரிவர்த்தனைகளை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
மாணவிக்கு பாலியல் தொல்லை: கார் ஓட்டுநர் கைது
சென்னை, பிப். 20- சென்னை அடையாறில் கலாஷேத்ரா கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். திருவான்மியூர், கலாஷேத்ரா கல்லூரியில் முதலா மாண்டு படிக்கும் ஒரு மாணவி, அடையாறு சிவகாமிபுரம் முதல் தெருவில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இந்த மாணவி திங்கட்கிழமை அந்த விடுதியின் அருகே உள்ள கடைக்குச் சென்று சில பொருட்களை வாங்கிக் கொண்டு, மீண்டும் விடுதியை நோக்கி வந்துள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த ஒரு நபர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அந்த மாணவி சத்தமிடவே, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் இச் சம்பவம் குறித்து அந்த மாணவி, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது மந்தைவெளி மலையப்பன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (எ) ஜோஸ்வா (45) என்பதும், அந்த பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கார் ஓட்டுநராக வேலை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் ஜோஸ்வாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
வாலிபரை தாக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம்
சென்னை, பிப். 20- கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் மோட்டார் பைக்கை ஓட்டி வந்த ஒரு வாலிபரை வழிமறித்து, வாகன ஓட்டுநர் உரிமத்தை கேட்டுள்ளனர். ஆனால் ஓட்டுநர் உரிமத்தை வழங்க வாலிபர் மறுத்துள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே மது போதையில் இருந்த வாலிபரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இந்த காட்சியை செல்போன் மூலம் வீடியோ எடுத்த ஒருவர், அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். விசாரணையில் அந்த இளைஞரை கோயம்பேடு போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சக்திவேல், முதல்நிலைக் காவலர்கள் தினேஷ், அருள் ஆகியோர் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ஆர்.சுதாகர் உத்தரவிட்டார்.
30 நாட்களில் யானை தாக்கி 5 பேர் பலி
கிருஷ்ணகிரி,பிப்.20- ஓசூர் வனப் பகுதிக்குள் முகாமிட்டுள்ள யானைகளால் இதுவரை 5பேர் கொல்லப்பட்டனர். கர்நாடக வனப் பகுதியிலிருந்து கூட்டமாக வந்துள்ள யானைகள் ஒசூர் வனப்பகுதிக்குள் முகாமிட்டு, வனப் பகுதியையொட்டி உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. மேலும் யானைகள் வருவது தெரியாமல் வயல்களில் தனியாக இருப்பவர்களை தாக்கி வருகின்றன. ஜனவரி 17 உத்தனப்பள்ளி அனுமந்தபுரத்தில் யானை தாக்கி மம்தா என்பவரும் பிப்.29 இல் மகராஜா கடையில் சாம்பசிவமும் பிப்.1 இல் சூளகிரி அருகே கோட்டங்கிரியில் ராமண்ணா என்பவரும், மூன்று நாட்களுக்கு முன்பு தளி அருகே வசந்தம்மா, அஸ்வதம்மா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். கடந்த 30 நாட்களுக்குள் யானைகள் தாக்கி 5 பேர் பலியாகினர். வனச்சரகர்கள் அலுவலர்களின் கவனமின்மை,மெத்தனப்போக்கு, துரித நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே உயிர் பலி ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வரிபாக்கி செலுத்தாத உணவகத்திற்கு எச்சரிக்கை
கிருஷ்ணகிரி,பிப்.20- ஓசூரில் விஜய் மருத்துவமனை எதிரில் செல்வி மெஸ் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது இந்த கட்டிடத்தின் உரிமையாளர் 7 ஆண்டுகளாக மாநகராட்சி வரி செலுத்தாமலும் பலமுறை வரி பாக்கி எச்சரிக்கை கடிதம் கொடுத்தும் அதன் பிறகும் வரி செலுத்த தவறியதால் திங்களன்று மாநகராட்சி அலுவலர்கள் வரி வசூலிக்க மாநகர ஆணையர் ஆணை கடிதத்துடன் வந்தனர். உடனடியாக பாக்கி வரிகள் அனைத்தையும் செலுத்த வேண்டும், இல்லை என்றால் கட்டிடத்தை இழுத்து மூடுவோம் என எச்சரித்து வரி பாக்கி கடிதம் கொடுத்தனர். எவ்வளவு கண்டித்தும் வலியுறுத்தியும் கட்டிட உரிமையாளர் வரி செலுத்தாமல் இழுத்தடிப்பார் என தெரிந்த நிலையில் உணவகம் நடத்தி வருபவர் கட்டிட உரிமையாளருக்கு பதிலாக பாக்கி வரியான 86 ஆயிரம் ரூபாயை காசோலையாக செலுத்தினார். வரி வசூல் செய்யப்பட்டதையடுத்து கட்டிட உரிமையாளரை எச்சரிக்கை செய்து மாநகராட்சி அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.
போதை மாத்திரை விற்ற மாணவர் கைது
சென்னை, பிப். 20- தரமணி கானகம் பகுதி யில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக தரமணி காவல்துறையினருக்கு திங்கட்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர், அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகை யில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினாராம். இதை யடுத்து அவர் வைத்திருந்த பையை காவல் துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் அவர், பையில் போதை மாத்திரை கள் இருப்பது தெரிய வந்தது. பறிமுதல் செய்த னர். மேலும் அவர், தரமணி கானகம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த குகன் (19) என்பதும், அவர் கல்லூரி மாணவர் என்பதும் தெரிய வந்தது.